தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள சிறப்பு பணிக்குழு - மந்திரி ராஜேஷ் தோபே தகவல்

மராட்டியத்தில் குழந்தைகளுக்காக கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட உள்ளதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

நாட்டிலேயே மராட்டித்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் நாட்டில் 3-வது கொரோனா அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும் தற்போது வாலிபர்கள், சிறுவர்களுக்கும் கூட தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக 2-வது கொரோனா அலையில் கடந்த பிப்ரவரி 15-ந் தேதி முதல் மாநிலத்தில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட 18 வயதுக்கும் குறைந்தவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது அலை சிறுவர்களை அதிகளவில் தாக்கும் என்று கூறுப்படுகிறது. எனவே மாநிலத்தில் குழந்தைகளுக்காக கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ள 3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. குழந்தைகளுடன் தாயும் இருப்பார் என்பதால் அவர்களுக்காக புதிய வடிவிலான தனிமை அல்லது சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினா.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்