கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களிடம் 1.77 கோடி தடுப்பூசி கையிருப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்

மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களிடம் 1.77 கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 21.89 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி இதில் 19 கோடியே 93 லட்சத்து 39 ஆயிரத்து 750 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.

இந்த நிலையில் மாநிலங்களிடமும், யூனியன்பிரதேசங்களிடமும் தற்போது 1 கோடியே 77 லட்சத்து 67 ஆயிரத்து 850 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன. மேலும் 7 லட்சம் தடுப்பூசிகளை அடுத்த 3 நாளில் வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்