தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 5.58 கோடி தடுப்பூசி கையிருப்பு

மாநிலங்களிடம் 5.58 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 70 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரத்து 565 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

இந்தநிலையில் பயன்படுத்திய தடுப்பூசிகள் போக, மாநிலங்களிடமும், யூனியன் பிரதேங்களிடமும் 5 கோடியே 58 லட்சத்து 07 ஆயிரத்து 125 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 96 லட்சத்து 25 ஆயிரத்து 760 டோஸ் தடுப்பூசிகளை வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை