தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை -குமாரசாமி வலியுறுத்தல்

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:-

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெஙகளூருவில் சந்தேகப்படும்படியான பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்னரே அவர்களை கைது செய்த போலீசாரை நான் பாராட்டுகிறேன். இத்தகைய சிக்கலான விஷயங்களில் போலீசார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அதிக அக்கறை செலுத்த வேண்டும். சமீபகாலமாக சாலைகளிலேயே கொலைகள் நடக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மக்கள் நிம்மதியாக வாழும் நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு