தேசிய செய்திகள்

காஷ்மீரில் தேர்தல் அதிகாரிகள் மீது கல்வீச்சு : துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

காஷ்மீரில் தேர்தல் அதிகாரிகள் மீது கல்வீச்சு. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

தினத்தந்தி

குப்வாரா,

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹண்ட்வாரா என்ற இடத்தில் நேற்று மாலை தேர்தல் பணி முடிந்து சென்று கொண்டிருந்த அதிகாரிகள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் சில அதிகாரிகள் காயம் அடைந்தனர். நிலைமை மிகவும் மோசமானதால் பாதுகாப்புக்கு சென்ற போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 4 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒருவர் உயிர் இழந்ததாகவும், மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து