கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தேசியக்கட்சி அந்தஸ்து பறிப்பு: இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேதனை

தேசியக்கட்சி அந்தஸ்து பறிக்கப்பட்டது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேதனை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்னிஸ்டு கட்சி ஆகிய 3 கட்சிகளின் தேசியக் கட்சி அந்தஸ்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது.தேசியக்கட்சி அந்தஸ்து பறிக்கப்பட்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேதனை தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்தக் கட்சி நேற்று கூறியதாவது:-

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செழுமையான வரலாற்றை, ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப்போராட்டத்தில் செய்த முக்கிய பங்களிப்பை, சுதந்திரத்துக்கு பின்னர் தேசிய நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் வகித்த பங்கை தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்திருக்க வேண்டும்.

நாட்டின் ஜனநாயக அரசியலை வலுப்படுத்துவதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் உள்ளது. நாட்டுக்கும், மக்களின் உரிமைக்கான போராட்டத்துக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தன் அர்ப்பணிப்பு மிக்க சேவையைத் தொடரும்.

அதே நேரத்தில் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்