தேசிய செய்திகள்

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் மாணவர், மாணவி பிணமாக மீட்பு: தற்கொலையா? போலீஸ் விசாரணை

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் மாணவர், மாணவி பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அது தற்கொலையா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

லடாக்கை சேர்ந்த ஒரு மாணவரும், மாணவியும் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். இதில் மாணவர் ஜாமியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும், மாணவி விஜய் நகரிலும் தங்கியிருந்தனர். 23 வயதுடைய இவர்கள் இருவரும் நேற்று அந்த மாணவரின் ஜாமியா நகர் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தனர்.

இந்த வீடு நேற்று வெகு நேரம் திறக்காமல் இருந்ததால், குடியிருப்பின் பாதுகாவலரும், அவரது மகனும் இணைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாணவரும், மாணவியும் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இருவரின் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர், மாணவி இருவரின் கழுத்திலும் காயம் இருந்தது. மேலும் அந்த அறையில் இருந்து 2 கத்திகளும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் பிணத்துக்கு அருகே ஒரு தற்கொலை கடிதமும் இருந்ததாக கூறிய போலீசார், அதில் எழுதியிருந்த விவரங்களை வெளியிடவில்லை.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு