தேசிய செய்திகள்

கை, கால் இழந்தபோதும் மனம் தளராமல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி; இளைஞர் சாதனை

ரெயில் விபத்தில் கை, கால் இழந்தபோதும் மனம் தளராமல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று இளைஞர் சாதனை படைத்து உள்ளார்.

தினத்தந்தி

மெயின்புரி,

உத்தர பிரதேசத்தின் மெயின்புரி நகரில் வசித்து வருபவர் சுராஜ் திவாரி. 2017-ம் ஆண்டு காசியாபாத் மாவட்டத்தின் தாத்ரி பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் இரண்டு கால்களையும் அவர் இழந்து உள்ளார்.

வலது கை மற்றும் இடது கையில் இரண்டு விரல்களையும் இழந்திருக்கிறார். எனினும், மனம் தளராமல் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி, கடுமையாக உழைத்து, வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார்.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவரது தந்தை ரமேஷ் குமார் திவாரி கூறும்போது, நான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது மகன் என்னை பெருமையடைய செய்து உள்ளான். அவன் மிக துணிச்சலானவன்.

வெற்றி பெறுவதற்கு அவனது மூன்று விரல்களே போதும் என கூறியுள்ளார். சுராஜின் தாயார் கூறும்போது, எனது மகன் தைரியம் வாய்ந்தவன் என கூறியதுடன், வாழ்வில் வெற்றியடைய கடுமையாக உழைத்து உள்ளான் என கூறியுள்ளார்.

அவனது இளைய சகோதரர்களையும் கடுமையாக உழைக்கும்படி கூறுவது வழக்கம் என்று கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து