தேசிய செய்திகள்

சியாச்சின் பனிமலையில் திடீர் துப்பாக்கி சூடு: ராணுவ அதிகாரி உயிரிழப்பு; 3 வீரர்கள் காயம்

சியாச்சின் பனிமலையில் நடந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்து உள்ளார். 3 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

ஜம்மு,

உலகின் மிக பெரிய பனிமலைகளில் ஒன்றாக சியாச்சின் பனிமலை உள்ளது. சர்ச்சைக்குரிய காஷ்மீரின் வடக்கு பகுதியில் 71 கி.மீ. நீளத்திற்கு இந்த பனிமலை அமைந்து உள்ளது.

இந்த பகுதியில் நாட்டின் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பவர்களை விட, அதிக குளிர் மற்றும் பனிச்சரிவு ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். கடுமையான பருவநிலையால், ஒரு வீரரை 3 மாத கால அளவுக்கே ராணுவம் பணியில் ஈடுபடுத்த முடியும்.

கடந்த 37 ஆண்டுகளில், தீவிர பருவநிலை மற்றும் எதிரிகளின் துப்பாக்கி சூடு போன்றவற்றால், சியாச்சினில் இதுவரை 800 வீரர்கள் உயிர் தியாகம் செய்து உள்ளனர்.

இந்த நிலையில், சியாச்சின் பனிமலையில் நடந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து