தேசிய செய்திகள்

புனேவில் போர் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்ததால் பரபரப்பு

புனே சர்வதேச விமான நிலையத்தில் போர் விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புனே,

மராட்டிய மாநிலம் புனே சர்வதேச விமான நிலையத்தில், சுகோய் போர் விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்தது. இந்த லேசான விபத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், விமான ஓடுதளம் சுமார் 2 மணி நேரம் மூடப்பட்டது.

இதன் காரணமாக புனே விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் மும்பைக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல், விமானம் புறப்பாடும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்திய விமானப்படை அதிகாரிகளால் விமான ஓடுதளம் சீர் செய்யப்பட்டதையடுத்து, விமான சேவை சீரானது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...