கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஆண்கள் நலனுக்காக தேசிய ஆணையம் அமைக்கக்கோரி பொதுநல மனு - சுப்ரீம் கோர்ட்டில் 3-ந் தேதி விசாரணை

ஆண்கள் நலனுக்காக தேசிய ஆணையம் அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடராக சுப்ரீம் கோர்ட்டில் 3-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மகேஷ்குமார் திவாரி என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி, கடந்த 2021-ம் ஆண்டு, 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 81 ஆயிரம் பேர் திருமணமான ஆண்கள், 28 ஆயிரத்து 680 பேர் திருமணமான பெண்கள் ஆவர்.

குடும்ப பிரச்சினைகளால் திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். குடும்ப பிரச்சினை தொடர்பான ஆண்களின் புகார்களை போலீஸ் நிலையத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆண்களின் நலன்களை பாதுகாக்க 'தேசிய ஆண்கள் ஆணையம்' அமைக்க சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இம்மனு நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 3-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு