தேசிய செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி அபு ஜெய்த் மும்பை விமான நிலையத்தில் தீவிரவாத ஒழிப்பு படையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியான அபு சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வசித்து வந்துள்ளார். அவர் இளைஞர்களை வசப்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ப்பதற்காக சமூக வலைதள குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில் சவூதி அரேபியாவில் இருந்து மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அபுவை தீவிரவாத ஒழிப்பு படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

அவர் லக்னோ நகருக்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்ய உள்ளனர்.

கடந்த ஏப்ரலில், சந்தேகத்திற்குரிய வகையிலான 4 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளான உமர் என்ற நசீம், காசி பாபா என்ற முசாமில், முப்தி என்ற பெய்சான் மற்றும் ஜகாவன் என்ற எய்டீஷாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடனான விசாரணையில், அபுவின் பெயர் போலீசாருக்கு தெரிய வந்தது.

அவர்கள் அனைவரும் இன்டர்நெட் வழியே பேசியுள்ளனர். அபு அவர்களுக்கு ஆலோசனை கூறுபவனாக இருந்துள்ளான்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்