தேசிய செய்திகள்

டி.நரசிப்புரா, உன்சூரில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு

டி.நரசிப்புரா, உன்சூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

மைசூரு;

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா அலசுக்கட்டை உண்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகண்ணா(வயது 45), கார்த்திக்(16). இவர்கள் ஸ்கூட்டரில் வெளியே சென்றனர். ஸ்கூட்டரை, நாகண்ணா ஓட்டினார். பின்னால் கார்த்திக்கு அமர்ந்து இருந்தார்.

டி.நரசிப்புரா தாலுகா பன்நேனஉண்டி கிராமம் சாலையில் சென்றபோது இவர்கள் சென்ற ஸ்கூட்டரும், சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து டி.நரசிப்புரா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல், மைசூரு மாவட்டம் உன்சூரை சேர்ந்த மோகன் (வயது 35) என்பவர் உறவினரின் திதி நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அனகோடு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த ஜீப்பும், அவரது மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உன்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்