தேசிய செய்திகள்

தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரெயிலின் நேரம் மாற்றம்

தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரெயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மேற்குவங்காள மாநிலம் சந்திரகாச்சியில் இருந்து தாம்பரம் வரும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரகாச்சியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16108) வருகிற 7-ந்தேதி முதல் தாம்பரத்திற்கு காலை 9.15 மணிக்கு பதிலாக காலை 9.05 மணிக்கே வந்தடையும்.

அதேபோல, தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாலை 5 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16121) மாலை 5 மணிக்கு பதிலாக இனி 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

அமெரிக்க பங்குச்சந்தையின் வக்கீல் நோட்டீசை ஏற்க அதானி சம்மதம்

சிகரெட், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி: இன்று முதல் அமல்

இன்று மத்திய பட்ஜெட்: தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

தமிழக சட்டமன்ற தேர்தல்: ‘இலவசம்’ வாக்குறுதிகளுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு