தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.

புதுடெல்லி,

காவிரி வழக்கில் கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த அமைப்புகளை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு 6 வார காலத்துக்குள் அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்த காலக்கெடுவின் கடைசி நாள் வருகிற 29-ந் தேதி ஆகும். எனவே, அதற்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அனைத்து அரசியல் கட்சியினரும், விவசாயிகள் சங்கத்தினரும் சுட்டிக்காட்டி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், 29-ந் தேதிக்குள், முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு கோஷங்களையும் எழுப்பினார்கள். போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் சோம்நாத் பாரதி உள்ளிட்டோர் நேரில் வந்து ஆதரவு அளித்தனர்.

இந்த போராட்டம், டெல்லி நாடாளுமன்ற தெரு போலீஸ் நிலைய ரோட்டில் நடைபெற்றது. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதி கேட்டனர். ஆனால் போலீஸ் தரப்பில் தொடர் போராட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் ஒருநாள் போராட்டத்துக்கு மட்டுமே அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.

அதை ஏற்று போராட்டம் நடத்திய விவசாயிகள், தங்களது போராட்டம் போலீஸ் அனுமதியுடன் தொடர்ச்சியாக நடைபெறும் என்று தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்