காரைக்கால்,
புதுச்சோரி மாநிலம் காரைக்காலில் பட்டதாரி தம்பதியர்கள், தமிழ் வேத மந்திரங்கள் கூறி திருமணம் செய்து அசத்தி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்-லட்சுமி தம்பதிகளின் மகன் கவியரசன். அதேபோன்று காரைக்கால் கிளிஞ்சல்மேடு செல்வராஜ்-விஜயலட்சுமி தம்பதிகளின் மகள் கிருத்திகா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு காரைக்கால் காமராஜ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.
இதில் பட்டதாரி மணமக்கள் கவியரசன் -கிருத்திகா தமிழ் வேத மந்திரங்கள் கூறி திருமணம் செய்து கொண்டனர். அப்போது தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
தமிழ் வேத மந்திரங்கள் கூறி திருமணம் செய்து கொண்ட பட்டதாரி தம்பதிகள் கவியரசன் -கிருத்திகா ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.