கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சக ஊழியர்கள் இருவரை சுட்டுக் கொன்ற பள்ளி ஆசிரியர்

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், தனது சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

ராஞ்சியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள பொரையாகட் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோடா காவல் கண்காணிப்பாளர் நாது சிங் மீனா, "ஒரு பெண் உள்பட இரண்டு ஆசிரியர்களின் உடல்கள் பள்ளியில் உள்ள அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தன, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரும் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டார்" என்று தெரிவித்தார்.

ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு