தேசிய செய்திகள்

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சை கருத்து - பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

இதற்கிடையில், உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டம் பஹ்ரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அஜித் யாதவ் ஆசிரியராக செயல்பட்டு வந்தார்.

இவர் உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டார். அப்போது, அவர் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர் அஜித் யாதவை மாவட்ட கல்வி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்