தேசிய செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை-கோலிக்கோடு ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதம்..!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை-கோலிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று மூன்று மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக புறப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 6.13 மணிக்கு மும்பை-கோலிக்கோடு செக்டரில் 114 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ 581, தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6.25 மணிக்கு மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து என்ஜினீயர்கள் விமானத்தை முழுமையாக சோதனை செய்தபிறகு மீண்டும் காலை 9.50 மணிக்கு விமானம் கோலிக்கோடு நோக்கி புறப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்