தேசிய செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

உன்சூர் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பறிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தினத்தந்தி

மைசூரு

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிதரள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தரணி மண்டியில் புதிதாக விடுதி கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரகாஷ்(வயது21) என்பவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரகாஷ் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் மின்வயரை காலால் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.

அவரை அருகில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சரகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்