தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

மைசூருவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் ஒருவா உயிழந்தார்.

தினத்தந்தி

மைசூரு

மைசூரு டவுன் பன்னி மண்டபம் அலிம் நகர் பகுதியை சேர்ந்தவர் வரத ஷெட்டி (வயது24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வரதஷெட்டி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். பின்னர் பணிமுடிந்து வரத ஷெட்டி மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பன்னி மண்டபம் பகுதியில் வரத ஷெட்டி மோட்டார் சைக்கிளில் வந்தபோது, முன்னால் சென்ற வேனை அவர் முந்தி செல்ல முயன்றார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையில் விழுந்தது. இதில் வரதஷெட்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த என்.ஆர். போக்குவரத்து போலீசார் சம்ப இடத்திற்கு விரைந்து வந்து வரத ஷெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து என்.ஆர். போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து