தேசிய செய்திகள்

மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை தாக்கிய பெற்றோர்கள்

தெலுங்கானா மாநிலத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை பெற்றோர்கள் தாக்கினர்.

தினத்தந்தி

நிஜாமாபாத்

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் மீது தாக்குதல் நடைபெற்றது. தெலுங்கானா ஆசிரியை பெற்றோர்கள் கூட்டத்தில் வைத்து ஆசிரியரை பெற்றோர்கள் தாக்கினர். ஆத்திரமடைந்த பெற்றோர்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின் மீது செருப்புகளை வீசினர்.

ஆசிரியரின் தவறான நடத்தை குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து.ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர் மீது இன்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு