தேசிய செய்திகள்

தெலுங்கானா: ஆட்டோ மீது லாரி மோதி விபத்து; 3 பேர் பலி

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்திலுள்ள யெல்லெண்டா கிராமத்தில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது. மாநிலத்தின் கம்மம் பகுதியிலிருந்து வாரங்கல் நோக்கி அதிக வேகத்தில் லாரி வந்தது. அது யெல்லெண்டா கிராமம் அருகே வந்தபோது சாலையில் எதிர் திசையில் வந்த மூன்று சக்கர ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆட்டோவில் பயணித்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனை கண்ட பொது மக்கள் விரைந்து சென்று காயங்களுடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து