தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதத்தினை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது; மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் தீவிரவாதத்தினை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் நடந்த மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் விவகாரத்தில் ஒவ்வொருவரிடமும் பேச அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரம் தீர்க்கப்படும் என நினைக்கிறேன். தீவிரவாதத்தினை கவனத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என கூறினார்.

காஷ்மீரில் 3 போலீஸ்காரர்களை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். காஷ்மீரி தீவிரவாதியான புர்ஹான் வானியை பெருமைப்படுத்தும் வகையில் அஞ்சல் தலைகளை பாகிஸ்தான் வெளியிட்டது.

இதனை அடுத்து அந்நாட்டுடன் இந்த மாத இறுதியில் நடைபெற இருந்த வெளியுறவு துறை மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது என இந்தியா அறிவித்தது.

இந்த நிலையில், காஷ்மீரில் தீவிரவாதத்தினை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என சிங் கூறினார்.

இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்