தேசிய செய்திகள்

சோதனை முயற்சி: நவி மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானப்படை விமானம்

நவி மும்பை விமான நிலையம், ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

மும்பை,

நவி மும்பை சர்வதேச விமான நிலையம் 1,160 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. ரூ,16,700 கோடி மதிப்பீட்டில் விமான நிலைய திட்டம் வருகிறது. இதில் இரண்டு ஓடுபாதைகள் ஒன்றுடன் ஒன்று 1.55 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், விமான நிலையத்தில் நிலையத்தில் ஏர்பஸ் சி 295 விமானத்தை டச் டவுன் செய்து விமானம் சோதனை முறையில் தரையிறக்கும் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் போக்குவரத்து கேரியர் C295 விமான நிலையத்தின் தெற்கு ஓடுபாதை 26 இல் விமானம் தரையிறங்கியது என்று விமான நிலைய ஆபரேட்டர் தெரிவித்தார்.

விமானம் தரையிறங்கியதும் நீர் பீய்ச்சு அடித்து வணக்கம் செலுத்தப்பட்டது. அதானி குழுமத்தால் உருவாக்கப்பட்டு வரும் இந்த விமான நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வணிக ரீதியாக செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி