தேசிய செய்திகள்

அந்த ஆப்பை டவுன்லோட் செய்யாதே என்று கண்டித்த தந்தை ...சிறுமி தற்கொலை

சிறுமி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பில்லி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஸ்னாப்சேட் ஆப்பை தனது மொபைல் போனில் டவுன்லோட் செய்துள்ளார். அந்த ஆப்பை டவுன்லோட் செய்யாதே என்று சிறுமியின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சிறுமி தற்கொலை செய்து கொண்டதை அவரது குடும்பத்தினர் நேற்று மறுநாள் பார்த்துள்ளனர்.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்