கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமல்

கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் புதிய சட்டங்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட காலனியாதிக்க காலத்துச் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆாபிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிகால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த புதிய சட்டங்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் இந்த சட்டங்களுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு அரசிதழில் கடந்த டிசம்பரில் வெளியானது.

இந்த நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. இதையொட்டி புதிய சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் சுமார் 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமா 40 லட்சம் தன்னாவலாகளுக்கு பயிற்சியளித்து தயாபடுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை