தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமான சேவை 2-வது நாளாக பாதிப்பு

ஏர் இந்தியா விமான சேவை 2-வது நாளாக பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது. மேலும் அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய துணை நிறுவனங்களின் பயணிகள் விமானத்தையும் இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. இந்தநிலையில் பயணிகள் சேவைக்கான கம்யூட்டர் சாப்ட்வேரில் நேற்று முன்தினம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் ஏர் இந்தியா விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டது.

இதேபோல் நேற்று அதிகாலை 3.30 மணி முதல் காலை 8.45 மணி வரை பயணிகள் சாப்ட்வேர் செயல்படவில்லை. இதன்காரணமாக 137 விமானங்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின அதிகாரி ஒருவர் கூறும்போது, பயணிகள் சேவைக்கான சாப்ட்வேர் நேற்று அதிகாலை முதல் சுமார் 5 மணிநேரம் வரை செயல்படாததால் முதலாவது பிரிவான டெல்லி -மும்பை பிரிவில் உள்ள 137 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்