தேசிய செய்திகள்

நான்கு நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை ஜனாதிபதியிடம் வழங்கினர்

புதுடெல்லி:

ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈகுவடார், சோமாலியா, ஜெர்மனி மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளின் இந்தியாவுக்கான தூதர்களின் நியமன பத்திரங்களை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் ஈகுவடார் குடியரசின் தூதர் ஃபிரான்சிஸ்கோ தியோடோரோ மால்டோனடோ குவேவரா, சோமாலியா குடியரசின் தூதர் அகமது அலி தாஹிர், ஜெர்மனி குடியரசின் தூதர் டாக்டர் பிலிப் ஆக்கர்மேன், சுரினாம் குடியரசின் தூதர் அருண்கோமர் ஹர்டியன் நியமனப் பத்திரங்களை ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT