தேசிய செய்திகள்

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி உறுதியாகி விட்டது

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்தார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இதில் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக பா.ஜ.க. மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் அறிவித்தன. ஆனால் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இரு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுவது மற்றும் முதல்-மந்திரி பதவியை தலா 2 ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என நாடாளுமன்ற தேர்தலின் போதே அமித்ஷாவுடன் பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறுகிறது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்ட வெற்றி மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையால் தங்கள் கட்சிக்கு செல்வாக்கு உயர்ந்து இருப்பதாக பா.ஜ.க. கருதுகிறது. இதனால் தேர்தலில் சிவசேனாவை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க விரும்புகிறது.

இதன் காரணமாக இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்தநிலையில் பா.ஜனதா தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு விட்டது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருவரும் கூட்டாக தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிப்பார்கள் என்றார்.

வருகிற 4-ந்தேதி வேட்பு மனு தாக்கல் முடிய உள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளை (புதன்கிழமை) 2 கட்சிகள் தங்கள் தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு