தேசிய செய்திகள்

ஓட்டலில் எச்சிலால் துப்பி ரொட்டி தயாரித்த வழக்கு; ஒருவர் கைது

உத்தர பிரதேச ஓட்டல் ஒன்றில் எச்சிலால் துப்பி ரொட்டி தயாரித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

காசியாபாத்,

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் லோனி பகுதியில் ஓட்டல் ஒன்றில் ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் அதில் எச்சிலால் துப்பியுள்ளார். இதுபற்றிய வீடியோ வைரலானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து இந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளனர். வீடியோ உண்மை என்பது நிரூபணம் ஆனால், அந்த நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்ட அதிகாரியான ரஜ்னீஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்