தேசிய செய்திகள்

வருகிற 7-ம் தேதி பாஜக கூட்டணியின் முதல்-மந்திரிகள் கூட்டம்

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. இதனால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டம் வருகிற 7-ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில், கூட்டணியில் உள்ள முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் பின்னடைவு, அதன் காரணம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து