தேசிய செய்திகள்

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 128.66 கோடி

இந்தியாவில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசி 128.66 கோடி ஆக உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் ஒரே நாளில் இன்று 71 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. 325வது நாளான இன்று செலுத்திய தடுப்பூசி எண்ணிக்கையால், மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 128.66 கோடி ஆக உயர்ந்து உள்ளது. நாட்டில் 85% தகுதி வாய்ந்த பொதுமக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.