திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 84 ஆயிரத்து 488 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37 ஆயிரத்து 61 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.3 கோடியே 78 லட்சம் ஆகும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி சிலாத்தோ ரணம் வரை காத்திருந்தனர்.
தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் சென்ற பக்தர்கள் சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை சாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர். இதுதவிர நேற்று முன்தினம் 4 லட்சத்து 28 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்து 74 ஆயிரம் பக்தர்கள அன்னப்பிரசாதம் பெற்றனர். 3 ஆயிரத்த 789 பேருக்கு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட் டது.