தேசிய செய்திகள்

இந்திய கடற்படைக்கு ரூ.3,500 கோடியில் 2 போர்க்கப்பல் கட்ட முடிவு; இந்தியா-ரஷியா இடையே கையெழுத்து

இந்திய கடற்படைக்கு ரூ.3,500 கோடியில் 2 போர்க்கப்பல் கட்டவதற்கான ஒப்பந்தம், இந்தியா-ரஷியா இடையே கையெழுத்து ஆனது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் - ரஷியாவின் ரோசோபோன் எக்ஸ்போர்ட் ஆகியவற்றின் இடையே ரூ.3,500 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்காக 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்களும் கட்டப்படும். இதற்காக வடிவமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் சில உபகரணங்களை ரஷிய நிறுவனம் அளிக்கும்.

இதுபற்றி கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சேகர் மிட்டல் கூறும்போது, இந்திய கடற்படைக்காக இந்த 2 போர்க் கப்பல்களும் கட்டப்படுகின்றன. கப்பல் கட்டும் பணி 2020-ம் ஆண்டு தொடங்கும். முதல் கப்பல் 2026-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். மற்றொரு போர்க்கப்பல் 2027-ம் ஆண்டு இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.


திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை