தேசிய செய்திகள்

கர்நாடகாவில் வருகிற 23ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு

கர்நாடகாவில் வருகிற 23ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. ஆன்லைன் வழியேயான வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு பற்றி முதல்-மந்திரி பொம்மை தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன் முடிவில், வருகிற 23ந்தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்று முடிவானது.

கர்நாடகா முழுவதும் இரவு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு இருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஒரு மணிநேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, மராட்டியம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இமாச்சல பிரதேசத்தில் முதல் கட்டமாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்