தேசிய செய்திகள்

கொரோனா 2வது அலையை எதிர்கொள்ள அரசு போதுமான நடவடிக்ககளை எடுக்கவில்லை - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களின் வாழ்க்கையோடு மத்திய-மாநில அரசுகள் விளையாடுகின்றன என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா நெருக்கடியால் மக்கள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது இந்த அரசு கருணை காட்டவில்லை. சொத்து வரி, மின் கட்டணம், பெட்ரோல்-டீசல் கட்டணம், உர விலையை உயர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி. வரியை காலதாமதமாக செலுத்துவதற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

கொரோனா முதல் அலைக்கு பிறகு அதன் 2-வது அலை வரும் என்று அரசுக்கு மதிப்பிட்டு இருந்தது. ஆனால் அதனை எதிர்கொள்ள போதுமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மருத்துவமனைகளில் மருந்து, படுக்கைகள் இல்லை. மத்திய-மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுக்காமல் பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்துடன் விளையாடுகின்றன.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்