தேசிய செய்திகள்

கெம்பேகவுடா விருது வழங்கும் விழா ஆகஸ்டு முதல் வாரத்தில் நடத்த திட்டம்

கெம்பேகவுடா விருது வழங்கும் விழாவை வருகிற ஆகஸ்டு முதல் வாரத்தில் நடந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:-

பெங்களூருவை நிர்மாணித்தவர் நாடபிரபு கெம்பேகவுடா. அவரது பெயரில் ஆண்டுதோறும் கர்நாடக அரசு சிறந்த சமூக சேவையாற்றியவர்களுக்கு கெம்பேகவுடா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான கெம்பேகவுடா விருது வழங்கும் விழாவை வருகிற 28-ந்தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று (26-ந்தேதி) அல்லது நாளை (27-ந்தேதி) பெங்களூருவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கெம்பேகவுடா விருது வழங்கும் விழாவை ஆகஸ்டு முதல் வாரத்தில் நடத்த அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆகஸ்டு 5-ந்தேதிக்குள் விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

கெம்பேகவுடா விருதுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்ய மாநில போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விருது பெறுபவர்களை தேர்வு செய்து பட்டியலை இறுதி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு