தேசிய செய்திகள்

வனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்தியவர் கைது

பொன்னம்பேட்டையில் வனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்தியவர் சிக்கினார்.

தினத்தந்தி

குடகு:

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா கிருகூர் கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி லாரியில் கடத்தி செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் ஜோடுபிடி கிராமத்தின் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று, போலீசாரை பார்த்ததும் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று விரட்டி மடக்கி பிடித்தனர். அப்போது தான் லாரியில் மரங்களை வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியில் இருந்த நாபொக்லு பகுதியை சேர்ந்த அப்பாசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள், ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்