தேசிய செய்திகள்

உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்; பெண் சாமியார் கோரிக்கை

உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என பெண் சாமியார் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டேராடூன்,

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் பிறப்பிக்கப்பட உள்ளதால் உத்தரபிரதேச மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. சமீபத்தில் இந்துத்துவா தலைவர்களில் ஒருவரான கமலேஷ் திவாரி லக்னோவில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த பெண் சாமியார் பிராச்சி தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக கூறி மத்திய அரசிடம் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு கேட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் விரிவாக பேசி இருப்பதாகவும் அவர் கூறினார்.

படுகொலை செய்யப்பட்ட கமலேஷ் திவாரிக்கு எதிராக முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் ஏற்கனவே தடை (பத்வா) பிறப்பித்து இருந்தனர். அப்போது அவர்கள், தனது தலைக்கு ரூ.51 லட்சம் பரிசு அறிவித்து இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். இதனால் தனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்றும் ஹரித்துவாரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இருந்தும் தனக்கு கொலை மிரட்டல் வந்திருந்ததாகவும் பேட்டியின் போது அவர் கூறினார்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்