தேசிய செய்திகள்

பாலகோட் தாக்குதலில் ஆதாயம் தேடும் மோடி அரசு புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் - தெலுங்குதேசம் சொல்கிறது

பாலகோட் தாக்குதலில் ஆதாயம் தேடும் மோடி அரசு, புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என தெலுங்குதேசம் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினத்தந்தி

விசாகப்பட்டினம்,

தெலுங்குதேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் தினகர் லங்கா கூறியதாவது:-

காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் அஜாக்கிரதையே காரணம். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2017-ம் ஆண்டே மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு குண்டு துளைக்காத பஸ்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார். தற்போது ராணுவ அமைச்சகத்தில் அதுபோன்ற 200 பஸ்கள் உள்ளன. ஆனால் இன்னும் அந்த படைகளுக்கு அவை கிடைக்கவில்லை. அந்த பஸ்கள் எங்கே?

பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் நடந்த வான் தாக்குதலை உடனடியாக தனது ஆதாயத்துக்கு பயன்படுத்திய மோடி அரசு, காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும். பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்