தேசிய செய்திகள்

ராஜ்யசபாவின் புதிய எம்.பி.க்கள் வரும் 22ந்தேதி பதவி பிரமாணம் ஏற்பு

ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 61 புதிய எம்.பி.க்கள் வரும் 22ந்தேதி பதவி பிரமாணம் ஏற்று கொள்கின்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.பி.க்கள் அனைவரும் வருகிற 22ந்தேதி ஹவுஸ் ஆப் சேம்பரில் பதவி பிரமாணம் ஏற்று கொள்கின்றனர். நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும்பொழுது அவையிலும் அல்லது கூட்டம் நடைபெறாத நாட்களில், ராஜ்யசபாவின் தலைவர் அறையிலும் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்து கொள்வது வழக்கம்.

ஆனால், இந்த முறை நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி விதிகளை பின்பற்றும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூன் 19ந்தேதி ஆந்திர பிரதேசம் 4, குஜராத் 4, ஜார்க்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3, மணிப்பூரில் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3 ஆகிய இடங்களுக்கு ராஜ்யசபை தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் உள்பட 20 மாநிலங்களை சேர்ந்த 61 எம்.பி.க்களின் பதவி பிரமாணம் நடைபெற உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு