தேசிய செய்திகள்

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேகமாக பரவத்தொடங்கிய கொரோனா தொற்று தற்போது வரை நீடிக்கிறது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் புதிதாக 3 ஆயிரத்து 548 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சுகாதாரப்பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து டெல்லியில் வருகிற 30-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரவுநேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்