தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 96,169 ஆக உள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 3,029 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 2 நாட்களாக 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை 10,054 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 4,485 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்திய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மராட்டியம், குஜராத் மற்றும் தமிழகத்தை தொடர்ந்து டெல்லி நான்காம் இடத்தில் உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்