புதுடெல்லி
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நாளை மறுதினம் இந்தியா வருகிறார்.இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் .
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வருகிறார்.என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.