தேசிய செய்திகள்

கேரளாவில் தடுப்பூசி முகாமில் குவிந்த பொதுமக்கள் - டோக்கன் விநியோகத்தின் போது தள்ளுமுள்ளு

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தினத்தந்தி

கோட்டயம்,

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கோட்டயம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில், அதிகாலை 6 மணியில் இருந்தே நூற்றுக் கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூடினர். மாநிலத்தில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த முகாமில் தினந்தோறும் ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதனை ஒருங்கிணைக்கும் வகையில் டோக்கன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சுகாதாரத் துறையினரால் முகாமில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கிய போது, வரிசையில் நிற்காதவர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்து சென்றனர். இதனால், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை