தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,674 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,07,754-ஆக உயர்ந்துள்ளது.

அதே போல 49,083 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,68,968-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 559 பேர் உயிரிழந்தனா. இதனால், இதுவரை உயிரிழந்தவாகளின் எண்ணிக்கை 1,26,121-ஆக அதிகரித்தது. இதனால் உயிரிழப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோ எண்ணிக்கை, தொடாந்து 10-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,12,665 போ சிகிச்சை பெற்று வருகின்றனா. இது, மொத்த பாதிப்பில் 6.03 சதவீதமாகும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு