தேசிய செய்திகள்

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் இந்தியாவின் சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்துகொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் அவர் இந்தியாவுக்கு முதன்முறையாக 25-ந் தேதி வருகை தருகிறார். அவருடன் அவரது மனைவி ஷெபோ மோத்செபெ, 9 மந்திரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள், 50 வர்த்தக பிரமுகர்கள் ஆகியோரும் இந்தியா வருகிறார்கள்.

26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவர்கள் விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். அவரது வருகை இந்தியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவையும் ஏற்படுத்தும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நெல்சன் மண்டேலாவுக்கு பின்னர் இந்திய குடியரசு தினவிழாவில் விருந்தினராக பங்கேற்கும் 2-வது தென் ஆப்பிரிக்க அதிபர் ரமபோசா என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து