தேசிய செய்திகள்

10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரபிரதேச அரசு அவசர சட்டம் கொண்டு வருகிறது

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்தது.

தினத்தந்தி

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த சட்டத்தை உத்தரபிரதேசத்தில் அமல்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை அமலுக்கு கொண்டு வரும் 3வது மாநிலம் உத்தரபிரதேசம் ஆகும். முதலில் குஜராத் மாநிலமும், 2வதாக ஜார்கண்ட் மாநிலமும் இந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

இதற்காக சட்டத்தை முதலில் அமல்படுத்திய குஜராத் மாநில மூத்த அதிகாரிகளுடன் உத்தரபிரதேச அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அதைத்தொடர்ந்து இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அவசர சட்டத்தை அதிகாரிகள் தயாரித்து உள்ளனர். அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்