தேசிய செய்திகள்

நாட்டில் தடுப்பூசி செலுத்தியோர் விகிதம் 50%க்கும் கூடுதல்; மத்திய மந்திரி தகவல்

நாட்டில் 50%க்கும் கூடுதலானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று மத்திய சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் பற்றி மக்களவையில் பேசும்போது, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ்கள் போடுவது ஆகியவை அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

கொரோனா பரவலை குறைக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒமைக்ரான் கொரோனா பரவலை அடுத்து, இந்தியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாட்டில் 50%க்கும் கூடுதலானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று மத்திய சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாம் வெற்றி பெறுவோம். வாழ்த்துகள் இந்தியா, தகுதியான மக்களில் 50%க்கும் கூடுதலானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது மிகவும் பெருமைக்குரிய தருணம். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றாக வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து